Search This Blog

Saturday, June 8, 2013

"இயேசு நாதர் மட்டும் அங்கு வரவில்லையே! என் இனிய பாரத தேசமே" : பாரதிதாசன்

"இயேசு நாதர் மட்டும்   அங்கு வரவில்லையே! என் இனிய பாரத தேசமே"

பாரதிதாசன்



தங்க நகை வெள்ளி நகை ரத்தினமிழைத்த நகை
தையலர்கள் அணியாமலும்,
விலை குறைந்த ஆடைகள் அணிந்துமே
கோவில் வர வேண்டுமென்று பாதிரி
விடுத்த ஒரு செய்தியால்,
கோவிலை விஷமென்று வெறுத்தார்கள்
பெண்கள், புருஷர்!

நிலை கண்ட பாதிரி பின்
கை, காது , மூக்கு, செவி, உதடு, கழுத்து,
நிறைய நகை போடலாம்,
கோவிலில் முகம் பார்க்க
நிலைக் கண்ணாடியும் உண்டென்று
இலை போட்டழைத்ததும்,
நகை போட்ட பக்தர்கள்
எல்லாரும் வந்து சேர்ந்தார்!

இயேசு நாதர் மட்டும்
அங்கு வரவில்லையே!
என் இனிய பாரத தேசமே!!


இது, பாரதிதாசன் பாடல் என்று நினைவு. தெரிந்தவர்கள் யாரேனும், இது யார் பாடிய கவிதை என்று எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்!

மிக அழகான கவிதை. விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

என்ன ஒரு எள்ளல்! என்ன ஒரு துள்ளல் கவிதையில்!

கோவிலுக்குப் போவதென்பது மிகப் பலருக்கு, ஒரு பொழுதுபோக்குதான் என்பதை மிக அழகாகச் சொல்லும் கவிதை. யாருமே கோவிலுக்கு வரவில்லையென்றால், அந்த பாதிரியாரோ, மற்ற குருமார்களோ என்ன செய்வார்கள்? அவர்களது வயிற்றுப் பிழைப்பு என்னாவது? அதனையும் கொஞ்சம் எள்ளலுடன் பார்க்கும் கவிதை. இவர்கள் அத்தனை பேரும், அழகாக நகை அணிந்து, கோவிலுக்குப் போய்தான் என்ன? வர வேண்டிய அந்தக் கடவுள் அங்கே வரவில்லையே என்ற அந்த அழகிய சொடுக்கு! அழகு!!

2 comments: