Search This Blog

Saturday, January 29, 2011

Tahmizhukkum AmuthenRu pEr : தமிழுக்கும் அமுதென்று பேர்!

தமிழுக்கு அமுதென்று பேர்! - அந்தத் 
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

என்ன ஒரு பாடல் இது!

பாரதிதாசன் பாடிய பாடல் இது. சுசீலாவின் இனிய குரலாலே மிகப் பிரபலமான இந்தப் பாடல், மிக அழகாகத் தமிழின் பெருமையை, இனிமையை விளக்குகின்றது. அவரது இன்ன பிற பாடல்களையும் காண, இங்கு நோக்கவும் : http://www.puducherry.com/bharathidasan/




இந்த ஏட்டின் பெயரே கூட, இந்தப் பாடலிலிருந்து பிறந்ததுதான். "தமிழ்", "தமிழ்" என்று சொல்லிக்கொண்டே இருந்தால், "அமிழ்து" "அமிழ்து" என்றுதான் கேட்கும். 


மிக நிச்சயமாக, தமிழ் மொழிபோல், இனிதாவதெங்கும் காணோம் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை கவிதைகள். எந்தனை அழகிய பாடல்கள். எத்தனைக் கதைகள். எத்தனை நாடகங்கள். எவ்வளவு அழகான மொழி. 


கம்பனும், பாரதியும், அவனது தாசனும், இளங்கோவும், இன்ன பிற கவிஞர்களும், கதாசிரியர்களும் வந்து, இந்த மொழியிலே காவியங்களும், காப்பியங்களும் செய்து நமக்கு பேருதவி புரிந்து இருக்கிறார்கள். 


என்ன இல்லை இந்த மொழியிலே! வாழ தமிழ் மொழி. வாழிய எம் தமிழ் நாடு.



No comments:

Post a Comment