Search This Blog

Friday, June 12, 2015

கிரேசி மோஹன் வெண்பா & எனது வாழ்த்துரை


கிரேசி மோஹன் வீட்டுக்கு வேளுக்குடி கிருஷ்ணன் வந்தபோது, கிரேசி மோஹன் எழுதிய வெண்பாவிற்குப் பதிலாக எழுதியது.


கிரேசி மோஹனின் வெண்பா:

அடியேன் அகத்திற்கு வேளுக்குடி கிருஷ்ணன் இன்று விஜயம் செய்தார்....வேளுக்குடியாரை வரவேற்று வெண்பா எழுதி அவர் ஸெல்லுக்கு மெசேஜாய் அனுப்பினேன்....வெண்பா இதோ...


''தோலுக்(கு) அடிமையாய் , தோற்றம் சதமென்று,
வாலைப் பிடித்திழுத்தேன் வன்புலியை(புலனை): -வேளுக்,
குடியாரே வந்தென் குடிபுகுந்(து)அம் மாலுக்(கு),
அடியாராய் மாற்ற அருள்''....கிரேசி மோகன்..


எனது வாழ்த்துரை:

குடில் வந்த கிருஷ்ணரை, வேளுக்
குடி தந்த கிருஷ்ணரை -நாடி
எதிர்கொண்ட கிருஷ்ணா, சாக்லேட்சிரிப்
பதிர்கின்ற கிருஷ்ணா வாழ்க!


No comments:

Post a Comment