"கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமொன்று வருகுது,
சத்தியத்தின் நித்தியத்தை, நம்பும் யாரும் சேருவீர்"
குதித்துக் கிளம்பி சத்தியாக்ராஹத்தில் சேர வைக்கும் பாட்டு. என்ன ஒரு பாட்டு! ராமலிங்கம் பிள்ளையின் இந்தப் பாடலை ஸத்தியாக்ரஹ நேரத்தில் பாடாதவர்களே இருந்திருக்க முடியாது.
காந்திஜியின் தத்துவத்தை, மிக அழகாக, மிகத் தெளிவாக எடுத்துக் காட்டிய பாடல் இது. சிறுவர் சிறுமியரும் கூட மிக எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்த பாடல் இது.
"நாமக்கல் கவிஞர்" என்று போற்றப்பட்ட அந்த அற்புதக் கவிஞரின் அதி அற்புதமான பாடல்.
யுத்தம் என்றால் அது கத்தியும், வாளும், வேலும் கொண்டதாகத்தான் இருக்கும் என்பதுதான் நமது நம்பிக்கை. அப்படித்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கோ, ஒரு யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த யுத்தத்தில், கத்தியும் இல்லை. இரத்தமும் இல்லை. இது, சத்தியத்தினை, நம்பும் மக்கள் நடத்தும் யுத்தம். அந்த சத்தியத்தின் மகிமையை, அந்த சத்தியம் என்பது என்றும் அழியாமல் இருக்கும் என்பதனை நம்பும் மக்கள் நடத்தும் யுத்தம். அந்த உத்தமர் காந்தி மகான் நடத்தும் யுத்தம்.
இதனை நம்பிச் சேருங்கள் என்று அரை கூவல் விடுக்கும் பாடல்.
இராமலிங்கம் பிள்ளையின் பலப்பல பாடல்களுள், என்னைக் கவர்ந்த மிக அழகிய பாடல் இது.
சத்தியத்தின் நித்தியத்தை, நம்பும் யாரும் சேருவீர்"
குதித்துக் கிளம்பி சத்தியாக்ராஹத்தில் சேர வைக்கும் பாட்டு. என்ன ஒரு பாட்டு! ராமலிங்கம் பிள்ளையின் இந்தப் பாடலை ஸத்தியாக்ரஹ நேரத்தில் பாடாதவர்களே இருந்திருக்க முடியாது.
காந்திஜியின் தத்துவத்தை, மிக அழகாக, மிகத் தெளிவாக எடுத்துக் காட்டிய பாடல் இது. சிறுவர் சிறுமியரும் கூட மிக எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்த பாடல் இது.
"நாமக்கல் கவிஞர்" என்று போற்றப்பட்ட அந்த அற்புதக் கவிஞரின் அதி அற்புதமான பாடல்.
யுத்தம் என்றால் அது கத்தியும், வாளும், வேலும் கொண்டதாகத்தான் இருக்கும் என்பதுதான் நமது நம்பிக்கை. அப்படித்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கோ, ஒரு யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த யுத்தத்தில், கத்தியும் இல்லை. இரத்தமும் இல்லை. இது, சத்தியத்தினை, நம்பும் மக்கள் நடத்தும் யுத்தம். அந்த சத்தியத்தின் மகிமையை, அந்த சத்தியம் என்பது என்றும் அழியாமல் இருக்கும் என்பதனை நம்பும் மக்கள் நடத்தும் யுத்தம். அந்த உத்தமர் காந்தி மகான் நடத்தும் யுத்தம்.
இதனை நம்பிச் சேருங்கள் என்று அரை கூவல் விடுக்கும் பாடல்.
இராமலிங்கம் பிள்ளையின் பலப்பல பாடல்களுள், என்னைக் கவர்ந்த மிக அழகிய பாடல் இது.