Search This Blog

Saturday, March 5, 2011

"Kadai viriththen Kolvarillai" : Ramalinga vallalaar


" கடை விரித்தேன், கொள்வாரில்லை"...ராமலிங்க வள்ளலார்

இருப்பதிலேயே மிகப் பெரும் சந்தோஷம், மற்றவர்களை சந்தோஷப் படுத்திப் பார்ப்பதுதான். அதே போல, மிகப் பெரும் துக்கம், மற்றவர்களுக்கு ஏதும் செய்ய முடியாமல் போவதுதான். அதிலும், நம்மால் முடிந்தும், மற்றவர்கள், தமது அறியாமையால், நமது யோசைனைகலையோ, நமது அறிவுரைகளையோ, ஏற்காமல் போகும்போது ஏற்படும் துக்கம் பெரிது. அவ்வாறு, அவர்கள் ஏற்காமல் போய், அவர்கள் துன்பப்படும்போது, நாம் படும் துக்கம் மிக மிகப் பெரிது.

அந்த துக்கத்தைத்தான், வள்ளலார், இங்கே படுகிறார். 

"என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்தேன். நல்லறிவுரை கூற வந்தேன். அதனைக் கேளாமல், இந்த மனிதர்கள், தங்கள் போக்கிலேயே போகின்றாரே" என்ற வருத்தம் வள்ளலாருக்கு நிரம்ப உண்டு. 
'திருவருட்பா' எழுதிய வள்ளலார், அதனை  மக்கள் மத்தியிலே பரப்ப முடியாமல் தவித்தார். "மருட்பா" என்று திருவருட்பாவிற்கு எதிராக மறுப்பு தோன்றியது. அதனை சமாளித்த வள்ளலார், மக்கள் மத்தியிலே நல்ல குணங்களும், சகிப்புத்தன்மையும் வளர பாடுபட்டார். 

இவ்வளவு செய்தும்கூட, மக்கள் குணம் மாறாமல், அவர்கள் தங்கள் மனம் போன போக்கிலேயே இருப்பது கண்டு மனம் வெதும்பினார். 

இவ்வளவு சொல்லியும், இவ்வளவு செய்தும்கூட மக்கள் இப்படி இருக்கின்றார்களே என்ற வருத்தமே, வள்ளலார், இப்படி பாடும்படி செய்தது. 

ஒரு ஞானியும் மனம் வெதும்பக்கூடும், மக்கள் இப்படி இருக்கிறார்களே என்று வருந்தி மனம் வருந்தக் கூடும் என்பதை மிக அழகாக படம் பிடிக்கும் வரிகள் இவை.