Search This Blog

Showing posts with label naalaayira thiva prabantham. Show all posts
Showing posts with label naalaayira thiva prabantham. Show all posts

Saturday, February 2, 2013

Pallandu, Pallandu pallayiraththaanu palakodi noorayiram": "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு"

பெரியாழ்வார் திருமொழி


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட தோள் மணிவண்ணா ! உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு!






கடவுளை வணங்கி தாம் கோரி வந்ததைப் பெறுவது - அது பொருள் வேண்டி வந்தாலும் சரி அல்லது அருள் வேண்டி வந்தாலும் சரி - வேண்டி வந்ததைப் பெறுவதே பக்தி என்று இருந்ததை மாற்றி, 'ஆண்டவனே! நான் நன்றாக இருக்க வேண்டும்'; 'எனது சுற்றாம் நன்றாக இருக்க வேண்டும்'; 'எனது நகரம் , நாடு நன்றாக இருக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை எல்லாம் தாண்டி, 'அப்பா! நீ நன்றாக இருக்க வேண்டும்' என்று அவனிடமே வேண்டிக் கொள்வது ஒரு புதிய கோணம். ஒரு அழகிய பார்வை. பக்தியிலே இது முற்றிய பக்தி.

அவனே எல்லாம் என்றால், அவன் நன்றாக இருந்து விட்டால் அனைவரும் நன்றாக இருப்போம் அல்லவா?

இத்தனை உலகங்களையும் படைத்தும், காத்தும் வருபவன் அவன். அனத்து உலகங்களும் இருப்பதும் அவனுள்ளேதான். அவன் பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு செவ்வனே இருந்த்துவிட்டால், அவனுள்ளே இருக்கும் அனத்தும் உலகங்களும் செவ்வனே இருந்துவிடும் அல்லவா!



 


இப்படி, யார் இந்த வாழ்க்கைக்கெல்லாம் மூல காரணமோ, அவனை வாழ்த்தி, அவன் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று அவனிடமே கேட்பதென்பது நிச்சயமாகப் புதுமையான ஒன்றுதான்!

அதனால்தான், இவரைப் 'பெரிய ஆழ்வார்' என்று தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடுகிறது!!